
ஊழல் என்பது உலகளாவிய பிரச்சினையாகும். அது எல்லா நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
இதில் எல்லா இன, சமய மக்களும் ஈடுபட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட இனத்தவர், சமயத்தவர் மட்டுமே அதில் ஈடுபட்டு வருவதாகக் கூறுவது அபத்தம் என்று பெர்சத்து தலைவர் Mohideen Yasin (முஹிடின் யாசின்)குறிப்பிட்டார்.
மலாய்க்காரர் அல்லாதவர்களும் பூமிபுத்ரா அல்லாதவர்களும் ஊழலில் அதிகமாக ஈடுபட்டு, மலாய்க்காரர்களை அதில் ஈடுபடத் தூண்டுவதாகப் பாஸ் கட்சித் தலைவர் Abdul Hadi Awang (அப்துல் ஹாடி அவாங்) குறிப்பிட்டு பெரும் சலசப்பை எற்படுத்தி இருந்தார்.
அது சம்பந்தமாக அவரை புக்கிட் அமான் போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர்.
தாம் அதன் விளக்கத்தை போலீசாரிடம் சொல்லி விட்டதாகவும், எஞ்சியவற்றை நீதிமன்றத்தில் தெரிவிக்கப் போவதாகவும் ஹாடி அவாங் கூறியிருகிறார்.
