
பாஸ் கட்சியின் ஒத்துழைப்பு இல்லாமல் அம்னோ தனித்து இயங்க காலம் வந்துவிட்டதாக அதன் தலைவர் Ahmad Zahid (அமாட் ஸாஹிட்) தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டில் இரு கட்சிகளுக்கிடையிலான முவாஃபக்காட் நேஷனல் ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாகவும் ஸாஹிட் குறிப்பிட்டார்.
காலத்திற்கு காலம் பாஸ் கட்சி தனது நிலையை மாற்றிக் கொண்டு அரசியலில் ஆதாயம் தேட நினைகின்றது.
Muafakat (முவாஃப்க்காட்)டின் நடவடிக்கையின் மூலம் மலாய்க்காரர்களிடையே ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் ஓங்க வைக்கவே அந்த உடன்பாடு செய்யப்பட்டதாகவும் ஆனால், பாஸ் கட்சி பெர்சத்துவோடு ஒட்டி உறவாடி, ஒற்றுமைக்கு ஊறு விளைவித்து விட்டதாகவும் ஸாஹிட் தெரிவித்தார்.
