25.3 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

கார்களை ஏற்றிச் சென்ற கனரக லோரி தீப்பற்றியது: 5 புதிய கார்கள் தீக்கிரை

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 227.2ஆவது கிலோ மீட்டரில் கார்களை ஏற்றிச் சென்ற நீண்ட லோரியில் தீப்பற்றி, அதில் இருந்த 5 புதிய ஹொண்டா கார்களும் தீப்பிடித்து எரிந்து சாம்பளாகின.
இச்சம்பவம் நேற்று மாலை 5.24 மணியளவில் நேர்ந்ததாக ரெம்பாவ் மாவாட்ட போலீஸ் தலைவர் ஹஸ்ரி முகமட் தெரிவித்தார்.
கார்களை ஏற்றிச் சென்ற லோரியை 31 வயது ஓட்டுநர், பினாங்கு தொழிற்சாலையிலிருந்து கொண்டு சென்றபோது, லோரியின் பிரேக் சாதனத்தில் கோளறு ஏற்பட்டு, தீ பிடித்ததாகவும் பின்னர், அது கார்களுக்கும் பரவி முற்றாக சேதப்படுத்தியுள்ளது.
தீக்கான காரணமும் அதனால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்பது பற்றியும் ஆராயப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles