
அரசு இலாகாக்களில் பணியாற்றும் ஒப்பந்த, தற்காலிகப் பணியாளர்களுக்கு சொக்சோ சந்தாத் தொகையைச் செலுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியூபெக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
2013ஆம் ஆண்டிலிருந்து மேற்கண்ட தொழிலாளர்களுக்கான சொக்சோ சந்தாவாக ரிம. 32,151,063,80ஆக உயர்ந்துள்ளதாக கியூபெக்ஸின் தலைவர் அட்னான் மாட் தெரிவித்தார்.
1971ஆம் ஆண்டு சொக்சோ சட்டத்தின்படி இந்த விதிமுறையை அனுசரிக்காத முதலாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
