
வரும் பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் முழுமையான வெற்றியை அடைய இளம் வாக்காளர்களே பக்க பலமாக இருப்பர் என்று நூர் இஸ்ஸா அன்வார் குறிப்பிட்டார்.
இளம் வாக்காளர்கள் பெருவாரியாக வாக்களிக்க வந்தால், பாக்காத்தானின் வெற்றி உறுதியாகும் என்று அவர் பினாங்கு ஜசெக தேர்தல் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசும்போது
தெரிவித்தார்.
நாட்டில் நடக்கும் ஊழல், அணுக்கமானவர்களுக்குச் சலுகை, குடும்பத்தினருக்குக் குத்தகைத் திட்டங்களை வழங்குதல் போன்றவற்றைத் தடுக்க பலகாலம் ஆகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
எம்மாதிரியான தடங்கல்களையும் கடந்து, வெற்றி பெறுவதே நமது நோக்கமாக இருக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
