
அரச மன்னிப்பு வழங்குவதில் எதைச் செய்யலாம் , எதைச் செய்யக் கூடாது என்பதை முன்னாள் சட்டத்
துறைத் தலைவர் டோமி தோமஸ் பேரரசருக்குத் சொல்லத் தேவையில்லை என்று வழக்கறிஞர் ஸைட் இப்ராஹிம்
சாடியுள்ளார்.
கைதி ஒருவருக்கு மன்னிப்பு வழங்குவதில் பேரரசருக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும்
அது அரசமைப்பு விதி தந்துள்ள கருணை வழங்கும் நல்நோக்கமாகும் என்றும் அதில் தலையிட யாருக்கும்
உரிமையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பேட்டி ஒன்றில் பதிலளித்த டோமி தோமஸ், பொது மன்னிப்பு வழங்கும் பேரரசர், மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையின் பேரில்தான் செயல்பட முடியும் என்று
தெரிவித்திருந்தார்.
நஜிப்புக்கு மன்னிப்பு வழங்குவதில் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
