
எஸ்ஆர்சி வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நஜிப் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு தர வேண்டுமென இணையதள கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு, இதுவரை 32,000 பேரின் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவருக்கு மன்னிப்பு தரக் கூடாதென்ற கையெழுத்து இயக்கத்தை பெர்சே 2.0 அமைப்பு தொடங்கியதில் 121,728 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆக, அவருக்கு மன்னிப்பு கொடுக்கலாம் என்பதை விட கொடுக்கக் கூடாதென்று கூறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டிற்கு அவப் பெயரையும் கடனையும் உருவாக்கி இருக்கும் நஜிப்பிற்கு மன்னிப்பு தரக் கூடாதென்று பலரும் வலியுறுத்துவது புலப்படுகிறது.
