
சுமத்திராவையும் மலாக்காவையும் இணைக்கும் வகையில் பாலம் ஒன்று தனியார் துறையின் ஒத்துழைப்போடு நிர்மாணிக்கப்படவுள்ளது.
120 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அந்தப் பாலமானது மலாக்கா, மஸ்ஜிட் தானாவையும் சுமத்திராவின் டூமாயையும் இணைக்கும்.
அந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க 20 ஆண்டுகள் பிடிக்கும். இதனை மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் அப்துல் ராவுஃப் தெரிவித்தார்.
அது மலேசியா, இந்தோனேசியாவுக்கும் இடையே பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
