
மசூதியின் இமாம் ஒருவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது மைத்துனருக்கு எதிராக பாலியல் பலாத்காரம், உடல்ரீதியான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் போன்ற 12 குற்றச்சாட்டுக்களை புரிந்ததாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். அதோடு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த அனைத்து குற்ற செயல்களும் செப்டம்பர் 2017 முதல் ஜூன் 13, 2022 வரை மலாக்கா ஜாசின் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் புரிந்ததாக கூறப்பட்டது.
