
கோலாலம்பூர் மாநகர்மன்றத்தின் முன்னாள் மூத்த துணை இயக்குநர் Sabudin Saleh (சாபுடின் சாலே) தம்மீது சுமத்தப்பட்ட 2 லட்சம் ரிங்கிட் கையூட்டு பெற்ற வழக்கிலிருந்து மீண்டும் தப்பினார்.
2020 டிசம்பர் 16ஆம் தேதி அதே வழக்கில் அவரை செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்த பின்னர், உயர்நீதிமன்றம் அவரை மீண்டும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது
அவர் மீண்டும் விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், அவரை விடுவித்தது. இத்தீர்பினை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை தவிர்த்து சாபுடினுக்கு மேலும் 6 ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
