
நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் இழுபறிக்கு துன் மகாதீரும், அன்வார் இப்ராஹிமே காரணம் என வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் குறிப்பிட்டார்.
பிரதமர் பதவிக்கு மகாதீர் தம்மை பரிந்துரைத்த பின்னர் அதற்காக எதையுமே செய்யவில்லை. மேலும், வாக்குறுதி கொடுத்தது போல அவர் நடந்து கொள்ளாமல் பிரதமர் பதவியிலிருந்து விலகி பக்காத்தான் ஆட்சி கவிழ இழக்க அவரே முழு முதற் காரணமாக இருந்துள்ளார்.
அன்வார், சபாவில் தமது பிகேஆரின் வேட்பாளர்களை வாரிசானுக்கு எதிராகவே போட்டியிட வைத்து தம்மை ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டினார்.
எனவே, மகாதீர், அன்வார் ஆகியோரை நம்பாமல் தாம் தனித்தே பொதுத்தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளதாக ஷாபி தெரிவித்தார்.
