
அம்மா வளர்த்த கட்சியை வலுப்படுத்த வாருங்கள் என்ற அழைப்புகளோடு ஓ.பி.எஸ். தரப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுப்பதற்காக வியூகம் அமைத்து உள்ளார்கள். ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு மீண்டும் சசிகலா, தினகரன் என்ற குடும்ப கட்டுப்பாட்டுக்குள் செல்ல விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே சென்று கொண்டிருக்கிறதே. நம் பக்கம் பலவீனமாகி வருகிறதே. இனி கட்சி ஈ.பி.எஸ்.சின் முழு கட்டுப்பாட்டில் தான் இருக்குமா என்ற சந்தேகம் ஓ.பி.எஸ். தரப்பில் உள்ள 2-ம் கட்ட நிர்வாகிகள் மத்தியிலும் துளிர்விட ஆரம்பித்து உள்ளது. இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள ஈ.பி.எஸ். முடிவு செய்து இருக்கிறார். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஓ.பி.எஸ்.சை நம்பி கொண்டிருப்பீர்கள். அம்மா வளர்த்த கட்சியை வலுப்படுத்த வாருங்கள் என்ற அழைப்புகளோடு ஓ.பி.எஸ். தரப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுப்பதற்காக வியூகம் அமைத்து உள்ளார்கள். குறிப்பாக வைத்திலிங்கம், தர்மன் எம்.பி., மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் என்று பெயர் சொல்லும் அளவில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகளை ஒவ்வொருவராக இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுபற்றி ஈ.பி.எஸ். தரப்பினர் கூறும்போது, “அவரை சுற்றி இருப்பவர்களை இழுத்துவிட்டு ஓ.பி.எஸ்சை தனி மரமாக்குவோம். அதன்பிறகு ஒரு கட்டத்தில் அவரும் வேறு வழியில்லாமல் வருவார் என்கிறார்கள். இப்போது ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு மீண்டும் சசிகலா, தினகரன் என்ற குடும்ப கட்டுப்பாட்டுக்குள் செல்ல விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுவும் ஈ.பி.எஸ்.சுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இப்போது உள்ள நிலையில் எடப்பாடி பக்கம் சென்றால் பொறுப்புகள் கிடைக்குமா என்ற தயக்கம் மட்டுமே சிலரிடம் இருக்கிறதாம் அதற்கு
