
தேசிய முன்னணியில் இருந்து கெராக்கான் விலகி உள்ளதால், அது பினாங்கில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பொதுத்தேர்தலில் மசீசவுக்கு தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், அது பினாங்கில் உள்ள 13 எம்பி, 40 சட்டமன்றத் தொகுதிகளில் கூடுதலான இடங்களில் போட்டியிட விண்ணப்பித்துள்ளது.
கெராக்கான் பினாங்கில் 1969 முதல் 2008ஆம் ஆண்டு வரை 38 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்துள்ளது.
2008ஆம் ஆண்டில் நடந்த 12ஆவது பொதுத்தேர்தலில் அது படுதோல்வி அடைந்த பின்னர், அது தேசிய முன்னணியில் இருந்து விலகி தற்போது பெரிக்காத்தான் நேஷனலோடு கூட்டு சேர்ந்துள்ளது.
