
நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த எல்லா அரசியல் கட்சிகளும் புதியவர்களை அறிமுகப்படுத்த வேண்டுமென அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர்.
பழையதை புதிதாக மாற்றவும் மலேசியாவை முன்னேற வைக்கவும் புதிய சிந்தனையும் புத்தாக்கம் நிறைந்தவர்கள் அதிகமாக வர வேண்டும்.
வரும் 15ஆவது பொதுதேர்தலில் கல்வியில் தேர்ந்த, தகுதியான புதியவர்கள் போட்டியிடத் தயாராக இருக்கும் வேளையில், பழையவர்கள், மூத்த அரசியல்வாதிகள் அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென தேசிய பேராசிரியர் மன்ற மூத்த உறுப்பினர் டாக்டர் Jeniri Amir (ஜெனிரி அமீர்) குறிப்பிட்டார்.



