
ஒரு காலத்தில் ஆன்மிகத்தை பொன்னே போல் கடைப்பிடித்து வந்த மலாய்க்காரர்கள் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், சுகபோக வாழ்க்கையை நாடி, நேர்மை நெறியிலிருந்து விலகி நடக்கத் தொடங்கியதாக முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹீத்தாம் கருத்தரங்கு ஒன்றில் குறிப்பிட்டார்.
நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர், மலாய்க்காரர்கள் சமய போதனையை வழுவாது பின்பற்றி நேர்மையாக வாழக்கையை நடத்தி வந்தனர். ஆனால், செல்வ வளம் பெருகப் பெருக, பட்டம், பதவி, அதிகாரம் போன்றவற்றால், அவர்களின் நாட்டமெல்லாம் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் செல்வத்தைச் சேர்க்க லஞ்ச ஊழலிலும் திளைத்து வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டதாக மூசா ஹீத்தாம் குறிப்பிட்டார்.
