
வெளிநாட்டு விசா விவகாரத்தில் 13,560 மில்லியன் சிங்கப்பூர் டாலரை கையூட்டாகப் பெற்ற வழக்கில் அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடியின் விடுதலையை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
நேற்று மாலை 4.40 மணியளவில் அந்த மனு தாக்கல் செயப்பட்டதை சட்டத் துறை அலுவலகம் உறுதிப்படுத்தியது.
அந்த வழக்கில் சாட்சியமளித்த 3 சாட்சியாளர்கள் படாடோப வாழ்க்கை மேற்கொண்டிருப்பதால், அவர்களே அந்தப் பணத்தைப் பங்கிட்டுக் கொண்டிருக்கலாம் என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
