
வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் பல்முனைப் போட்டியைத் தவிர்க்க மலாய் சார்பு கட்சிகளின் கூட்டணியை உருவாக்க பாஸ் கட்சி முனைவதாக அதன் துணைத் தலைவர் Tuan Ibrahim Tuan Man (துவான் இப்ராஹிம் துவான் மான்) தெரிவித்தார்.
எனினும், அம்னோ தன் வழியில் சென்று தனித்தே போட்டியிட விரும்பினால், அதனை எதிர்கொள்ள பாஸ் தயாராகவே இருப்பதாக துவான் மான் குறிப்பிட்டார்.
அம்னோவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஸ் கட்சி தயாராகவே உள்ளதாகவும் மலாய் சார்பு கட்சிகள் ஓன்றை ஒன்று மோதிக் கொண்டால் பயனேதுமில்லை என்றும் அவர் கறிப்பிட்டார்.
தேர்தல் என்பது போட்டியிடுவது மட்டுமல்ல, வெல்லும் வியூகத்தை வகுப்பதே முக்கியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
