
கோவிட்-19 பெருந்தொற்றின் காலத்தில் விவேகக் கைப்பேசியின் பயன்பாடு 100 விழுக்காட்டை தொட்டு, பல்வேறு பிராச்சிகளை உருவாக்கி இருப்பதாகவும் அறிவியல் பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் Mohd Heikal Husin (முகமட் ஹெய்க்கால் ஹுசின்) தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் உள்ளோரின் பயன்பாடு 96.2 விழுக்காடாக இருக்கும் வேளையில், நகர்ப்புறங்களில் 92.3 விழுக்காட்டினர் அதனைப் பயன்படுத்துவதாக ஆய்வு தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கைப்பேசியை முற்றாகச் சார்ந்து இருப்பது சமூக, சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
கைப்பேசியை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும் என்பதால் இளையோர் அதனை விட்டுப் பிரிய முடியாத நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்
