
2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க நிதி ஒதுக்க வேண்டுமென அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியூபெக்ஸின் தலைவர் அட்னான் மாட் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட் காலத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றும் காலம் நேரம் பார்க்காமல் அவர்களின் சேவை பாராட்டத்தக்கதாகவும் என அவர் சுட்டிக்காட்டினார்.
விலைவாசியைச் சமாளிக்க போனஸ் தொகை அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதால், அதனை அரசு பரிசீலிக்க வேண்டுமென அட்னான் கேட்டுக் கொண்டார்.
