
15ஆவது பொதுத்தேர்தலை நடத்த வேண்டுமென தேசிய முன்னணி வலியுறுத்தும் வேளையில், எதிர்க்கட்சிகளோ பணவீக்கம், விலையேற்றம், ரிங்கிட்டின் வீழ்ச்சி, வெள்ளம் போன்ற காரணங்களைக் காட்டி அதனைத் தள்ளி வைக்க சாக்குப் போக்குக் காட்டுகின்றன.
உண்மையில், தோற்றுவிடுவோம் எனற அச்சத்தில் அவை இருக்கின்றன. அவற்றுள் ஒற்றுமையில்லை. அவை தயாராகவில்லை என்பதே அதற்கு முக்கிய காரணமாகும் என்று அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.
