
பக்காத்தான் ஹராப்பானில் நிலவிய பதவிப் போட்டியால்தான் அதன் 22 மாத கால ஆட்சி கவிழ்ந்ததாகவும் அதற்கு தேசிய முன்னணியைக் குறை கூறுவதால் பயனேதும் இல்லையென ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.
ஒப்புக் கொண்டது போல, ஈராண்டுகளுக்குப் பின்னர் மகாதீர் ஆட்சியை ஒப்படைக்காததால், அன்வார் இப்ராஹிமின் ஆதரவாளர்கள் புரட்சியில் ஈடுபட்டனர். மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர், பெரிக்காத்தான் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.
இக்கட்டான நேரத்தில் பெரிக்காத்தானுக்கு தேசிய முன்னணி ஆதரவு தந்து, அசாதாரண சூழ்நிலையில் இருந்து நாட்டைக் காப்பாற்றிய தேசிய முன்னணிக்கு மகாதீர் நன்றி பாராட்ட வேண்டுமென ஸாஹிட் குறிப்பிட்டார்.
