
சபா கடலில், கடல் கொள்ளையில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார்.
இரு குழுக்களைச் சேர்ந்த அவர்கள், ஆகஸ்டு 15, 18ஆம் தேதிகளில் பூலாவ் சி-அமிலில் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம், பிரிவு 395இன் விசாரணை செய்யப் படுவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறையும் பிரம்படியும் தரப்படும்.
