
2022ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கு மாறாக வெறும் ஒரு விழுக்காட்டு பி40 மாணவர்களுக்கு 2,763 டேப்லெட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது பெரும் அதிருப்தியை அளிப்பதாக முன்னாள் கல்வி துணையமைச்சர் தியோ நீ சிங் குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 515 மில்லியன் செலவில் 6 லட்சம் டேப்லெட்டுகள் விநியோகிக்கப்படும் என்று உறுதி கூறியிருந்த வேளையில், உண்மையில் 385.30 மில்லியன் பெறுமான 350,000 டேப்லெட்டுகள்தான் விநியோகிக்கப் பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சர் கூறியிருப்பது அவரின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக தியோ தெரிவித்தார்.
மேலும், 350,000 டேப்லெட்டுகளில் வெறும் 0.8 விழுக்காடு பி40 பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
