28.8 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

1எம்டிபி வழக்கில் ஸெத்தி அக்தார் சாட்சியமளிப்பார்

நஜிப் ரசாக்கின் 1எம்டிபியின் 230 கோடி ரிங்கிட் முறைகேடு வழக்கில் பேங்க் நெகாராவின் முன்னாள் கவர்னர் Zeti Akhtar Aziz (ஸெத்தி அக்தார் அஸிஸ்) ஒரு சாட்சியாக அழைக்கப்படுவார் என்று அரசின் சிறப்பு வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நஜிப்பின் வழக்கறிஞர் Shafee Abdullah (ஷாபி அப்துல்லா), ஆம்பேங்கின் முன்னாள் நிர்வாகி Cheah Tek Kuang (சியா டெக் குவாங்) கிடம், மறைந்து வாழும் ஜோ லோ, ஸெத்தி அக்தாரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தாரா என்ற கேள்வியை எழுப்பிய பின்னர், கோபால் ஸ்ரீராம் இந்த விவரத்தைத் தெரிவித்தார்.
ஸெத்தி அக்தாரின் கணவரும் பிள்ளைகளும் ஜோ லோவிடமிருந்து 10 கோடி ரிங்கிட்டைக் கையூட்டாகப் பெற்றதாக கடந்தாண்டு இணையதள சர்சைக்குரிய எழுத்தாளர், ராஜா பெத்ரா கமாருடின் தமது பத்திரிகையில் செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles