
15ஆவது பொதுத்தேர்தலில் எந்தவொரு கூட்டணிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், தொங்கு நாடாளுமன்றமே உருவாகும் என்ற எச்சரிக்கை விடப்படுகிறது.
இந்நிலையில், தேசிய முன்னணி தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியோடு சேர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த பராமரிப்பு அரசின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அம்மாதிரியான சாத்தியத்தை மறுக்கவில்லை.
ஆயினும், கட்சியின் தலைமைத்துவமே அதனை முடிவெடுக்க வேண்டுமென குறிப்பிட்டார். பல கட்சிகள் உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்கம் அமைவது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதே என்றும் அவர் ஒப்புக் கொண்டார்.
