
🔊To listen to this news in Tamil, Please select the text.
தைப்பூச திருவிழாவில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதைக் கடுமையாக விமர்சித்த மத போதகர் Mohamad Wadi Annuar Ayub முகமட் வாடி அனுவார் அயூப், அந்த ஊர்வலத்தைப் பேய்களுக்கான வழிபாடு எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
பிப்ரவரி 10ஆம் தேதி மலாக்கா பள்ளிவாசல் ஒன்றில் அவர் அவ்வாறு பேசியதற்குக் கடுமையான கண்டனம் எழுந்ததை அடுத்து, தாம் மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்தார்.
தாம் இந்துகளையும் தைப்பூசத் திருவிழாவையும் இழிவு படுத்தும் நோக்கத்தோடு பேசவில்லை. அந்தச் சமயத்தில் தம்மையும் அறியாமல் வாய் தவறி அப்படி பேசி இருந்தாகத் குறிப்பிட்டார். பேய்களின் வழிபாடு என்று குறிப்பிட்டது தவறுதான் என்றும் அதற்காகத் தாம் மனப்பூர்வமாக மன்னிப்பைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
