
🔊To listen to this news in Tamil, Please select the text.
கின்றாரா தொகுதியில் மொத்தம் 600 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு RM200 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றன.
இத்திட்டத்தின் மூலம் ராயாவைக் கொண்டாடுவதற்கான உபகரணங்களை வாங்க குடியிருப்பாளர்களுக்கு உதவும் முடியும் என்று சட்டமன்ற உறுப்பினர் இங் சீ ஹான் தெரிவித்தார்.
“கடந்த வாரம், இந்த வவுச்சர் விநியோக நிகழ்வு ஜெயண்ட் கின்ராராவில் நடந்தது. இந்த உதவியைப் பெற்ற பெரும்பாலோர் ராயாவுக்குத் தேவையான பொருட்களைக், குறிப்பாக சமையலறைப் பொருட்களை வாங்குவதற்கு வவுச்சரைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்,” என்று முதலீடு ஆட்சிக்குழு உறுப்பினர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
இந்த ஆண்டு மாநில அரசு ஹரி ராயாவுக்காக 37,550 வவுச்சர்களை ரிங்கிட் 7.510 மில்லியன் செலவில் வழங்கியது.
சீனப் புத்தாண்டு மற்றும் தீபாவளி கொண்டாட்டங்கள் உட்பட 82,400 பயனாளிகளை உள்ளடக்கிய இத்திட்டத்திற்கு RM16.48 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இது மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான நீண்ட கால முயற்சியாகக் குறைந்த வருமானம் பெறும் குழுக்களை இலக்காகக் கொண்ட மாநில அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும்.
