
🔊To listen to this news in Tamil, Please select the text.
வங்க தேசத்தில் இன்னமும் தொடரும் அரசியல் போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்களால் சிறுபான்மை இந்து மக்கள் மேலும் தாக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோலாலம்பூர், அம்பாங் சாலையில் உள்ள வங்கதேச தூதரகத்தில் ஆகஸ்ட் 15, வியாழக்கிழமை மகஜர் வ்ழங்கப்பட்டது.
இதில், மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவரும் ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவருமான பொன்.வேதமூர்த்தியும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
பொதுமக்கள் ஏறக்குறைய 250 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் வங்க தேச இந்துக்களுக்கு ஆதரவாக மகஜர் வழங்கப்ப்பட்டது.
