
🔊To listen to this news in Tamil, Please select the text.
நிட்சா அஃப்ஹாமின் மரண விவகாரத்தில் குற்றவியல் அம்சங்கள், தனிப்பட்ட, மனநலப் பிரச்சினைகள் குறித்தும் போலிஸார் விசாரிக்கின்றனர் என்று சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் கூறினார்.
காணாமல் போன நிட்சா அஃப்ஹாமின் கிள்ளான் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரின் மரணம் தொடர்பான விசாரணையை போலிசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குறிப்பாக குற்றவியல், தனிப்பட்ட, மனநலப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலிஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டபடி நிட்சா அஃப்ஹாமின் தனிப்பட்ட உடைமைகளுக்கு எந்த இழப்பும் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
