
🔊To listen to this news in Tamil, Please select the text.
பள்ளிகளில் தேர்வுகளை ரத்துச் செய்தால் அது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க இயலும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
மேலும், தேர்வுகளை ரத்துச் செய்து விட்டு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆய்வு, அனுபவம், வாழ்க்கை சூழல் தொடர்பான கற்றல் கற்பித்தலை வழி நடத்த வேண்டும் என்றார் அவர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை மட்டுமல்லாமல், மாணவர்கள் விளையாட்டு, கழகங்கள், சீருடை இயக்கங்களில் ஆகியவற்றில் தங்களை ஈடுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் அவர்களுக்கு அனுபவக் கல்வியும் கிட்டும் என்று ஃபட்லினா குறிப்பிட்டார்.
மாணவர்களிடையே கல்வி அழுத்தத்தைக் குறைக்க பள்ளிப் பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்ய கல்வியமைச்சகம் தயாரா என்று டான் கர் ஹிங்கின் கூடுதல் கேள்விக்குப் ஃபட்லினா இவ்வாறு பதிலளித்தார்.
