
உலகளாவிய விநியோக நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து, வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் அரசு விரைவில் கூடுதல் நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று நிதி நிறுவனங்களுடனான வட்ட மேசை அமர்வுக்குத் தலைமை வகித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
“வேலை வாய்ப்புகளை இழந்தவர்கள், குறிப்பாக டிப்ளமா மற்றும் இளங்கலை பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு உதவும் புதிய நடவடிக்கைகளை குறுகிய காலத்தில் அறிவிப்போம்,” என்றார்.
இந்த அமர்வில்
- மலேசிய தேசிய வங்கியின் ஆளுநர் டத்தோஸ்ரீ அப்துல் ரஷீத் கஃப்பூர்
- பிரதமர் துறையின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கன்
உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, உலகளாவிய விநியோக நெருக்கடியின் தாக்கத்தை குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.
அவற்றில்:
- பூடி மடானி ரோன்95 (BUDI95) திட்டத்தின் கீழ் பெட்ரோல் விலையை நிலைநிறுத்துதல்
- சபா மற்றும் சரவாக்கிற்கான டீசல் மானியத்தைத் தொடருதல்
ஆகியவை அடங்கும்.
இந்த புதிய நடவடிக்கைகள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
