
கடந்த மாதம் ஆயர் ஈத்தாமில் உள்ள ஒரு சீன மயானத்தில் அநாகரிகச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட உள்ளூர் தம்பதியினரை, இங்குள்ள உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது.
முன்னதாக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்திருந்த 12 மாத சிறைத் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை ஏற்று, உயர் நீதிமன்ற நீதிபதி ரோபியா முகமது இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
இந்த வழக்கில் 58 வயதான எம். ஜெகதீசன் மற்றும் 37 வயதான ஹலிலா அபு பாக்கர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மறுபரிசீலனை செய்யப்பட்டது.
நீதிபதி தனது தீர்ப்பில்,
- குற்றச்சாட்டில் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பை உறுதி செய்தார்.
- ஆனால், 12 மாத சிறைத் தண்டனையை மாற்றி,
மார்ச் 23 அன்று கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அனுபவித்த காலமே தண்டனையாகக் கருதப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், தண்டனையை மறுஆய்வு செய்வதில் அரசுத் தரப்பும் பிரதிவாதி தரப்பும் இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியதால், அதை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.
இதனால், தம்பதியினர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.
