
நாட்டில் 5 மாநிலங்களில் வெள்ள பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஜொகூர் மாநிலத்தில் 168 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்று இரவு 229ஆக இருந்தது.
கிளந்தானில் 240ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 111 ஆக குறைந்துள்ளது.
பேரா மாநிலத்தில் 116 பேரும் மலாக்காவில் 11 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கெடா மாநிலத்தில் 64 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
