
புத்ராஜெயாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 20 வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
இன்று மாலை பெய்த கனமழையை தொடர்ந்து புத்ராஜெயாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.
குறிப்பாக புத்ராஜெயா பிரிசன்ட் 11இல் மோசமாக வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் கிட்டத்தட்ட 20 வாகனங்கள் தண்ணீரில் சிக்கி கொண்டன.
தண்ணீரை வெளியேற்றுவதற்கும், தடுக்கப்பட்ட கால்வாய்களை சுத்தம் செய்வதற்கும் உதவும் பணிகள் தீயணைப்பு வீரர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிற்பகல் 5.30 மணியளவில் வெள்ளம் குறைந்துவிட்டது என்று புத்ராஜெயா தீயணைப்புப் படையின் இயக்குநர் அப்துல் மனாவ் இதனை கூறினார்,
