
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க முண்டியடித்ததில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 முதல், 19-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்படுவதால் டிக்கெட் வாங்க 8 இடங்களில் 91 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்து சென்றனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில்ஆறு பக்தர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
