

செய்தி / படங்கள் : எம்.முருகன்
கோலாலம்பூர் ஜலான் ஈப்போவில் அமைந்துள்ள நகரத்தார்கள் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலையிலிருந்து ஏராளமான பக்தர்கள் புடை சூழ சிறப்பு வழிபாடுகளுடன் கும்பாபிஷேகம ஆரம்பமானது. தமிழ்நாடு பிள்ளையார்பட்டி சேர்ந்த தலைமை குழுக்கள் பிச்சை குழுக்கள் அவர்கள் தலைமையில் இந்த கும்பாபிஷேக பூஜைகள் நடைபெற்றது. ஆலய செயலாளர் மெய்யப்பன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் .

கும்பாபிஷேகம் அனைவருடன் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்றது இதை வெற்றிகரமாக பிச்சை குருக்கள் தலைமை ஏற்று நடத்தினார் .

அவருக்கும் நன்றி எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி இந்நிகழ்வில் ஒற்றுமை துறை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, தான் ஶ்ரீ ரேணா துரை சிங்கம், டத்தோ தெய்வீகன், டத்தோ ராமநாதன் செட்டியார் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்



