
பாலஸ்தீனத்தின் மீதான சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் 2023 அக்டோபர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இதில் 1200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 250-க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் கடந்த 13 மாதகாலமாக நடத்திய தாக்குதலில் 56,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
காசா நகரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பினர். மேலும் பணையக்கைதிகள் பரிமாற்றம் பல கட்டங்களாக நடைபெற்றது.
