
மலேசிய இந்திய நம்பிக்கை சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் கோபி அவர்கள் அனைவருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார். இந்த பெருநாளில் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து சிக்கனத்தை கடைபிடித்து இந்த திருநாளை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இல்லாதவருக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் என்று கேட்டுக் கொண்டார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற வழியில் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து பாடுபடுவோம். அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்
