33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

💥 புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு: “அருகில் நடந்த அகழ்வுப் பணி காரணமா?” – விசாரணை தீவிரம்! 🚨

புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, அருகிலுள்ள கழிவுநீர் குழாய் தோண்டும் பணி முக்கிய சந்தேகமாக மாறியுள்ளது என்று மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமான் கான் தெரிவித்தார்.

🛠️ வெடிப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில், கழிவுநீர் குழாய் பதிக்கும் வேலை நடந்ததுடன், அந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட பேக்ஹோ மற்றும் அகழ்வாராய்ச்சி இயந்திரம் சம்பவத்துக்குப் பின்னர் புதைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

📅 கடந்த மார்ச் 30-ஆம் தேதி பணி நிறுத்தப்பட்டது, ஆனால் அதற்குள் முக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

👷‍♂️மேம்பாட்டாளர், ஒப்பந்ததாரர், துணை ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் தற்போது போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

🔥 வெடிப்பு நிகழ்த்த, எரிவாயு, காற்று மற்றும் தீப்பொறிகள் மூன்று முக்கிய காரணிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

🗣️ இதுவரை 56 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தின் உண்மையான காரணம் கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

📌 “இது ஒரு தவறான வேலைத் திட்டமா, இல்லை அசம்பாவிதமா?” – மக்கள் பதில் எதிர்நோக்குகிறார்கள்!
முன்னெச்சரிக்கை இல்லாமல் நடந்த தூண்டுதல் பணிகள் இன்னும் எத்தனை பேருக்கு ஆபத்தாக மாறும்?” எனக் கேள்விகள் எழுகின்றன.

👉 பின்விளைவுகள் என்னவாகும்? அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
தொடர்ந்து வருகிற தகவல்களுக்கு காத்திருக்குங்கள்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles