
செய்தி / படங்கள் : எம்.முருகன்
திருக்கடையூர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, அறுபதாம் கல்யாணம் (சஷ்டியப்தபூர்த்தி) நிகழ்ச்சியை நடத்தி, சுவாமி தரிசனம் செய்யும் தம்பதிகள் உலகின் பல நாடுகளிலிருந்தும் இக்கோவிலுக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், தொழிலதிபர் விவேக் அவர்கள் திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து, கோவிலில் உள்ள யானை அவருக்கு ஆசீர்வாதம் வழங்கி வாழ்த்தியது. இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


