25.8 C
Kuala Lumpur
Thursday, January 29, 2026

Vetri

பத்து மலையில் எம்பிஎஸ் கடைகளின் வாடகை ஏலத்திற்கு விடப்படுவது ஏன்? வெ.4,000 முதல் வெ.18,000 வரை வாடகையா? -ஸ்ரீ ரமேஷ்

பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு சாலை ஓரங்களில் அமைக்கப்படும் எம்பிஎஸ் கடைகளை வாடகை இம்முறை ஏல முறையில் வழங்கப்படுவது ஏன் என்றும் உடனடியாக இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீரமேஷ் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக இங்கு கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்துவரும் சிறு வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் இந்த செயலை அவர் கடுமையாக சாடினார்.

கடந்த ஆண்டு இந்த கடைகளை வெ.400-500 வரை வாடகைக்கு எடுத்த சிறு வியாபாரிகளுக்கு இந்த முறை பெரிய ஏமாற்றம்தான். தற்போது இந்த கடைகள் ஏல முறையில் வெ.4,000 முதல் வெ.18,000 வரை வாடகைக்கு விடுப்படுகிறது.

இங்கு கடைகளை வாடகைக்கு எடுத்து சுமார் வெ.2 ஆயிரம் வரை லாபம் பெற்ற சிறு வியாபாரிகள் வாடகைக்கே குறந்தது வெ.4 ஆயிரம் வரை செலுத்த சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என ஸ்ரீ ரமேஷ் தெரிவித்தார்.

இந்த தொகுதியில் மூன்று இந்திய நகராண்மைக் கழக உறுப்பினர்கள் உள்ளனர். இந்த விவகாரம் குறித்து அம்மூவரும் வாய் மூடி இருப்பது ஏன்?

இந்த ஏல முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சிலாங்கூர் மாநில மந்திரி புசார் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று பத்துமலையில் கூடிய சிறு வியாபாரிகள் கேட்டுக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles