29.5 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

தலையை காலால் மிதித்த போலீஸ்காரர்! விசாரணை ஆரம்பம்!

கூலிம் நகரில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் உதிரிபாகக் கடை முன்பு, ஒருவர் மீது போலீஸ் அதிகாரி தலையில் மிதிப்பது போன்ற காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியன் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில்,
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கை

  • நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கு (SOP) உட்பட்டதா
    அல்லது
  • தெளிவான விதிமுறை மீறலா

என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக கெடா மாநில போலீஸ் தலைவரைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“போலீஸ் அமலாக்க நடவடிக்கைகள் அனைத்தும் நிலையான நடைமுறைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். இது அனைத்து அதிகாரிகளாலும் புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான உண்மை நிலை முழுமையான விசாரணைக்கு பின் வெளிவரும் என்றும், அதுவரை பொதுமக்கள் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணையை விரைவுபடுத்தியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles