30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

மலேசிய மக்கள் சக்தி கட்சி விரைவில் தேசிய முன்னணியில் இணையும்!

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உடன் நடைபெற்ற சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இச்சிறப்பு சந்திப்பு இன்று விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால கூட்டணி வாய்ப்புகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் இடம்பெற்றன.

தற்போது, மலேசிய மக்கள் சக்தி கட்சி தேசிய முன்னணியின் நட்பு கட்சியாக செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்தக் கட்சி தேசிய முன்னணியின் முழுமையான கூட்டணி கட்சியாக இணைவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி அவர்களுடன் பேச தயாராக இருப்பதாகவும்,
மஇகா எந்தவிதத்திலும் இந்த இணைப்பிற்கு தடையாக இருக்காது என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மலேசிய மக்கள் சக்தி கட்சி விரைவில் தேசிய முன்னணியில் இணையும் என்ற நம்பிக்கையை டத்தோஸ்ரீ தனேந்திரன் வெளிப்படுத்தினார்.

இந்த சந்திப்பில்:

  • கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஆர்.கே. ரமேஷ்
  • உதவித் தலைவர் கே. குகேஸ்வரன்
  • உச்சமன்ற உறுப்பினர் எஸ்.பி. கானா

உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு, எதிர்கால அரசியல் கூட்டணிகளில் மாற்றங்களை உருவாக்கக்கூடியதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles