25.2 C
Kuala Lumpur
Friday, July 24, 2026

Vetri

நெகிரி செம்பிலான் அரசு அனைவருக்குமான அரசு – மந்திரி பெசார் அமினுடின் ஹருண்

🔥 Views : 2,585
👁 Reading Now : 32

பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான நெகிரி செம்பிலான் அரசாங்கம், அனைத்து இன மக்களையும் சமமாகக் கருதி செயல்படும் அரசாகும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் தெரிவித்துள்ளார்.

லிங்கி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், மாநிலத்தின் வளர்ச்சிப் பலன்களை அனைத்து சமூகத்தினரும் சமமாக அனுபவிக்கும் வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நெகிரி செம்பிலானில் அதிகளவிலான மக்கள் நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இந்திய சமூகமும் புறக்கணிக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனவே, இதுவரை அரசாங்கம் செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் சாதனைகளை கருத்தில் கொண்டு, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் மாநிலத் தேர்தலில் வாக்காளர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று அமினுடின் ஹருண் கேட்டுக்கொண்டார்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வீடமைப்புத் திட்டங்கள், நியாயமான ஊதியம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சமமான முன்னேற்றம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு மாநில அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இந்த முன்னேற்றம் தொடர மக்களின் ஆதரவு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்திருந்த நிலையில், தற்போது நடைபெறும் 16வது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் இரு கூட்டணிகளும் தனித்தனியாக களமிறங்கியுள்ளன.

இந்தத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் அனைத்து 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், பாரிசான் நேஷனல் பெரிக்காத்தான் நேஷனலுடன் தொகுதிப் புரிந்துணர்வு ஏற்படுத்தி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 11 தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles