
பிரதமருக்கு வழங்கி வந்த ஆதரவை அம்னோவை சேர்ந்த 11 எம்பிக்கள் மீட்டுக்கொண்டுள்ள வேளையில் மசீச தனது ஆதரவை பிரதமருக்கு தெரிவித்துள்ளது.
கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் தேசிய முன்னணியில் இவ்விரு கட்சிகளும் அங்கம் வகிக்கிறது.
இப்போது அம்னோ தனது முடிவை எடுத்திருக்கும் நிலையில் மசீச அதற்கு உடன்படவில்லை.
வரும் பொதுத்தேர்தல் வரை பெரிக்காத்தான் நேஷனல் நேஷனல் அரசுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவோம் என்று மசீச அரசியல் பிரிவு இன்று அறிவித்துள்ளது தற்போது மசீசவிடம் 2 எம்பிக்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
