27.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

அம்னோவின் முடிவை மதிக்காமல் செயல்படும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அதற்கான விளைவை சந்திப்பார்

அம்னோ கட்சி எடுத்த முடிவை மீறி பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அதற்கான விளைவை சந்திக்க வேண்டி இருக்கும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி என்று பகிரங்கமாக எச்சரித்தார்.
அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு பெரிக்காத்தான நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை மீட்டுக் கொள்ளும் கட்சியின் முடிவுக்கு இணக்கம் தெரிவித்தார்.
ஆனால் இன்று கட்சியின் முடிவை மதிக்காமல் அவர் தொடர்ந்து பிரதமருக்கு ஆதரவை வழங்கி கொண்டிருப்பதோடு கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி வருகிறார்.
இதற்கான விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என்று டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி சுட்டிக்காட்டினார்.
நேற்று நடந்த பத்திரிகையாளர் கூட்டத்திலும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுடன் இவர் ஒன்றாக காணப்படுகிறார் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles