
நானே இன்னும் பிரதமர். தமக்கு போதுமான எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக கூறியிருக்கும் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசினுக்கு எதிராக பேராக் உலு கிந்தா கெஅடிலான் சட்டமன்ற உறுப்பினர் முகமட் அரபாட் போலீசில் புகார் செய்துள்ளார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அறிவிப்பில் நிறைய குளறுபடிகள் உள்ளன.
அம்னோ கட்சியை சேர்ந்த 11 எம்பிக்கள் ஆதரவை மீட்டுக் கொண்ட போதிலும் தமக்கு இன்னும் பெரும்பான்மை இருப்பதாக டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறியிருப்பதில் நிறைய குளறுபடிகள் உள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை விவகாரத்தில் உண்மையை தெரிந்துகொள்ள போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
