
நாடாளுமன்ற துணை சபாநாயகராக பதவி வகித்த டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மானை அமைச்சராக நியமிக்க இன்னும் காலம் கடந்து விடவில்லை என்று அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டத்தோஸ்ரீ சப்ரி சிக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று மதியம் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர்.
அந்த வகையில் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் அமைச்சரவையில் இடம்பெறும் வகையில் அவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்.
ஆகவே பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விரைந்து டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மானை அமைச்சராக நியமிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
