
சரவா மாநிலத்தில் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கு டெல்டா வைரஸ் காரணம் என்று சரவா மாநில சுகாதார இயக்கம் அறிவித்துள்ளது.
சரவாக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள நோய்த் தொற்றுகளில் 90 விழுக்காடு டெல்டா வைரஸ் தொற்றினால் பரவியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 தினங்களாக சரவாக்கில் நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 1,000 மாக இருக்கிறது.
சரவா மாநிலத்தில் 12 மாவட்டங்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
