
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கம் ஒரு தற்காலிகமானது என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார். இது மக்களின் ஆதரவோடு அமைந்த அரசாங்கம் அல்ல. நாட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதோடு அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வரை இவர் தலைமையான அரசுக்கு ஆதரவு வழங்குவோம். கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அவர் அதிரடியாக அறிவித்தார்.
